Friday, November 27, 2009

நினைவுகள்

பாதியில் வந்தாய்! பாதியில் சென்றாய்! ஏன் விதைத்தாய் ஆசை எனும் விதையை என் பாதையில்?? விதைத்தது உன் தவறா இல்லை அதற்கு தண்ணீர் ஊற்றியது என் தவறா?? நீ அன்று விதைத்த ஆசைகள் இன்று நினைவுகளாக என் பாதையில்!
நினைவுகளோ உன்னுடையது, விட்டுச்செல்ல மனமில்லை, அறுவடை செய்து கூடவே எடுத்து செல்லவும் சக்தி இல்லை, கார்த்திருந்து பார்த்துக்கொள்ள காலமும் அனுமதிக்கவில்லை...வாழ்க்கை பயணமோ நெடுந்தூரம் உள்ளது!
நினைவுகளை பகிர்ந்து, சுமந்து என் பயணத்தை தொடர்வதற்காக ஒரு வழிபயணியை எதிர்பார்த்து கார்திருக்கிறேன் உன் நினைவுகளுடன்!!!

"எது வரை??"

அலைகள் ஒய்வதில்லை, உலகம் உள்ளவரை..
மௌனம் கலைவதில்லை, சப்தம் வரும்வரை..
வாசனை வருவதில்லை, மலர்கள் மலரும்வரை..
கனவுகள் கலைவதில்லை, விடியல் விடியும்வரை..
தேடல்கள் முடிவதில்லை, தேவைகள் தீரும்வரை..
நதிகள் நிற்பதில்லை, கடலில் சேரும்வரை..
பயணங்கள் முடிவதில்லை, முடிவு தெரியும்வரை..
காதல் அழிவதில்லை, இதயங்கள் உள்ளவரை..
இதயம் தூங்குவதில்லை, காதல் உள்ளவரை..
நிழல்கள் மறைவதில்லை, இரவுகள் வரும்வரை..
சந்திரன் தோன்றுவதில்லை, சூரியன் மறையும்வரை..
துன்பங்கள் தொலைவதில்லை, மகிழ்ச்சி மலரும்வரை..
நதிகள் பிறப்பதில்லை, மழைத்துளி பொழியும்வரை..
மழைத்துளி பொழிவதில்லை, மேகங்கள் சேரும்வரை..
மேகங்கள் சேர்வதில்லை, தென்றல் வீசும்வரை..
நிம்மதி என்றுமில்லை, உன் நினைவுகள் உள்ளவரை..
உன் நினைவுகள் அழிவதில்லை, நான் அழியும்வரை..