Friday, November 27, 2009

"எது வரை??"

அலைகள் ஒய்வதில்லை, உலகம் உள்ளவரை..
மௌனம் கலைவதில்லை, சப்தம் வரும்வரை..
வாசனை வருவதில்லை, மலர்கள் மலரும்வரை..
கனவுகள் கலைவதில்லை, விடியல் விடியும்வரை..
தேடல்கள் முடிவதில்லை, தேவைகள் தீரும்வரை..
நதிகள் நிற்பதில்லை, கடலில் சேரும்வரை..
பயணங்கள் முடிவதில்லை, முடிவு தெரியும்வரை..
காதல் அழிவதில்லை, இதயங்கள் உள்ளவரை..
இதயம் தூங்குவதில்லை, காதல் உள்ளவரை..
நிழல்கள் மறைவதில்லை, இரவுகள் வரும்வரை..
சந்திரன் தோன்றுவதில்லை, சூரியன் மறையும்வரை..
துன்பங்கள் தொலைவதில்லை, மகிழ்ச்சி மலரும்வரை..
நதிகள் பிறப்பதில்லை, மழைத்துளி பொழியும்வரை..
மழைத்துளி பொழிவதில்லை, மேகங்கள் சேரும்வரை..
மேகங்கள் சேர்வதில்லை, தென்றல் வீசும்வரை..
நிம்மதி என்றுமில்லை, உன் நினைவுகள் உள்ளவரை..
உன் நினைவுகள் அழிவதில்லை, நான் அழியும்வரை..

No comments:

Post a Comment