Friday, November 27, 2009

நினைவுகள்

பாதியில் வந்தாய்! பாதியில் சென்றாய்! ஏன் விதைத்தாய் ஆசை எனும் விதையை என் பாதையில்?? விதைத்தது உன் தவறா இல்லை அதற்கு தண்ணீர் ஊற்றியது என் தவறா?? நீ அன்று விதைத்த ஆசைகள் இன்று நினைவுகளாக என் பாதையில்!
நினைவுகளோ உன்னுடையது, விட்டுச்செல்ல மனமில்லை, அறுவடை செய்து கூடவே எடுத்து செல்லவும் சக்தி இல்லை, கார்த்திருந்து பார்த்துக்கொள்ள காலமும் அனுமதிக்கவில்லை...வாழ்க்கை பயணமோ நெடுந்தூரம் உள்ளது!
நினைவுகளை பகிர்ந்து, சுமந்து என் பயணத்தை தொடர்வதற்காக ஒரு வழிபயணியை எதிர்பார்த்து கார்திருக்கிறேன் உன் நினைவுகளுடன்!!!

No comments:

Post a Comment